
Monday, July 20, 2009
அழுக்கு சமுதாயம்

Saturday, July 11, 2009
இயற்கை

கண்மூடித்தூங்கும் போது அன்னையாகிறாய்
கவிதைகள் எழுதும் போது காதலியாகிறாய்
தவறுகள் தொடுக்கும் போது ஆசனாகின்றாய்
உன்னுள் எத்தனை குழந்தைகள்?
அருவிகளாய்ச் சுமக்கின்றாய்
பசுமையைச் சுமக்கின்றாய்
வனவிலங்குகளைச் சுமக்கின்றாய்
நீயும் ஒரு சுமைதாங்கி !
எத்தனை விஞ்ஞானம் வளர்ந்தாலும்
காலத்தால் அழியாதது கவிசுவடுகள்
இன்றோ காவியச் சுடுகாடுகள்
அத்தனைக்கும் யார் காரணம் ? நான் (மனிதன்)
உன்னை அளிக்கும் நோக்கத்தில் என்னை
அழித்துக் கொள்கின்றேன். ஆருயிரே
அன்பெனும் கேள்வியை நடத்தி பசுமை என்னும்
வரம் தருவாயாக? அல்லது சாபம் தருவாயா?
நாங்கள் விரும்புவது சுந்தரவனக்காடுகள்
சுடுகாடுகள் அல்ல.
நிலவில்லாமல் இரவில் ஒளி இல்லை
நீ ! இல்லாமல் மனித வாழ்வில் ஒளி இல்லை
உன்னுள் அமைதியாய் இருக்கும்போது
ஆடும் மயிலாய் அமைதியாய் மெருகூட்டுகிறாய்
அளிக்கும்போது எரிமலையாய்
விரிசலாய் படமெடுக்கிறாய்
மனிதன் வளர்ந்தது உன்னுள்
மானுடம் வளர்ந்தது உன்னுள்
நாகரிகம் வளர்ந்தது உன்னுள்
ஒவ்வொரு அணுவிலும் உள்ள உன்னை
என் அன்னையாகக் கருதுவதில் தவறில்லை
கறிமேடாய் ஆகின்ற உன்னை காவியச் சுவடுகளாக
மாற்ற இதோ வருகிறது
இன்னொரு மானுடம்.
Thursday, July 9, 2009
மனிதசக்தியின் மகத்துவம்

Monday, July 6, 2009
வறுமையின் வளமை

வளைந்து நிற்கிறது
ஓட்டைகளோடு
வயி்ற்று சோறு
ஒருவேளை
அதுவும் சிலவேளை
எப்போதாவது
விளக்கின் வெளிச்சம்
விதியில் தெரியும்!
வறுமை வளமாக வாழ்கின்றது
இங்கே!
மழைத்துளிகள் வெளியில் இருந்து
உள்ளே செல்ல
கண்ணிர் துளி உள்ளே இருந்து
வெளியே வந்து போகின்றது!
இந்த பூமி மேட்டின்
மேல் வறுமையின்
பாட்டு கேட்டுக்கொண்டே
இருகின்றது
ஆண்டாண்டுகாலமாக!
Friday, July 3, 2009
இது சத்தியம்

Wednesday, July 1, 2009
ஏன் இந்த மாற்றம்

குளிர்கின்ற தென்றலும்
Sunday, June 28, 2009
தமிழன்

தமிழர்களாய் பிறந்துவிட்டோம்,,
தமிழ் மண்ணை மறந்துவிடோம்,,
தாய் நாட்டை பிரிந்துவிட்டோம்,,
அந்நிய நாட்டிலே வந்து,,
அவதிகள் படுகின்றோம்,,
தமிழன் வாழும் இன் நாட்டில்,,
தமிழனுக்கோர் மதிப்பில்லை,,
வாயிருந்தும் ஊமைகளாய்,,
வாழ்கின்றோம் அகதிகளாய்,,
தாய் நாட்டை நாம் காணும்,,
நாள் அது தொலைவில் இல்லை,,
நாளை மலரும் தமிழ் ஈழம்!
இந்தியாவும், இலங்கையும்

இந்தியாவும், இலங்கையும்
ஓர் எழுத்து இதில் அகதியாய்
வந்தது தான் எங்கள் தலை எழுத்து
தமிழ்க் கொண்டு என்னை வளர்த்த தாயகமே
எங்கள் உயிர்க்காத்த உனக்கு
ஒரு வந்தனமே....
பச்சைக்கிளி கூட்டம் போல
வாழ்ந்து வந்தோம்
இன்று பிச்சை எடுக்கும் கூட்டம் போல
சிதைந்து விட்டோம்
சொத்து சுகம் எல்லாம்
பறி கொடுத்து இன்று
சோத்துக்காக நின்றோம் கைகட்டி
பத்து வருடம் ரத்தம் சிந்தி
சோர்த்தது எல்லாம் பத்து நிமிட
வாழ்க்கை போல கரிச்சாம்பலானது
பித்துபிடித்த தீ பற்றி எல்லாம்
எரிந்து போனதால் கச்சை கூட
இல்லாமல் கை ஏந்தி நின்றோம்.
அகதியை ஓடி வந்தோம்
நாங்கள் வாடிக்கையா
அகதிக்குள்ளே அகதியாக வாழ்ந்து
இன்று வேடிக்கையான
எங்கள் நிலை,
இதற்கு காலம் தன்
பதில் சொல்ல வேண்டும் ...