Monday, July 20, 2009

அழுக்கு சமுதாயம்


அந்திவானம் மொதுவாக
அழுதுகொண்டிருந்தது!

இரண்டு கம்புகளின் நடுவே
இணைக்கப்பட்ட
கயிற்றின் மேல்
சின்ன மலர் ஒன்று
சித்திரம் வரைந்து கொண்டிருந்தது!

சயிக்கிள் வளையத்துள்
சாகசச் சரித்திரம்
செய்து கொண்டிருந்தது.

கயிற்றின் கீழ் தாய்
தாளத்தோடு,,
கயிற்றின் மேல் மகள்
சோகத்தோடு,,,,,
வயலின் வரப்பைப்போல
நடுவில் வறுமைக்கோடு,,,,
கூட்டம்
கூடி நின்று
ஆட்டம் பார்த்தது

அவ்வப்போது
விரித்திருந்த துண்டில்
விழுந்தன
சில
சில்லறைக் காசுகள்.

கயிற்றில் இருந்து
இறங்கி
கூட்டத்தை நோக்கி
வாட்டத்தோடு
தட்டை நீட்டினாள்
ந்த பிஞ்சு மலர்.

கூடி நின்ற கூட்டத்தில்
பல கால்கள்
பின்னோக்கிச் சென்றன
கைதட்டி ரசித்த
கூட்டம்
கைவிட்டுப் போவதை
அவளால் தாங்கமுடியவில்லை

திடிரென்று
கூட்டத்தின் நடுவில்
ஒருவன் நுழைந்தான்
எச்சில் சோற்றோடு,,,
பழைய தட்டோடு....

நிமிர்ந்து பார்த்தான்
சிறுமியின் தட்டு
சில்லறையின்றி
சிரித்தது

தயக்கம் ஏதும் இன்றி
தன் தட்டைப்
பார்த்தான்
எச்சில் சோறும்
ஏழெட்டு ரூபாயும்
இருந்தது...
ஏழெட்டு சில்லறையயும்
ஏழைச் சிறுமியின்
தட்டில்,,
போட்டுவிட்டு அந்த
பிச்சைக்காரன்
அழகாய் சிரித்தவாறு
அங்கிருந்து நகர்ந்தான்.

அவன் சிரிப்பில்
ஆயிரம்
அர்த்தங்கள்
தெரிந்தன என்பதெல்லாம் பொய்!
ஒரே ஒரு
அர்த்தம் தெரிந்தது
"இந்த அழுக்கு சமுதாயம்
எப்போது அழகாகப் போகிறது"

Saturday, July 11, 2009

இயற்கை


கண்மூடித்தூங்கும் போது அன்னையாகிறாய்

கவிதைகள் எழுதும் போது காதலியாகிறாய்

தவறுகள் தொடுக்கும் போது ஆசனாகின்றாய்

உன்னுள் எத்தனை குழந்தைகள்?

அருவிகளாய்ச் சுமக்கின்றாய்

பசுமையைச் சுமக்கின்றாய்

வனவிலங்குகளைச் சுமக்கின்றாய்

நீயும் ஒரு சுமைதாங்கி !

எத்தனை விஞ்ஞானம் வளர்ந்தாலும்

காலத்தால் அழியாதது கவிசுவடுகள்

இன்றோ காவியச் சுடுகாடுகள்

அத்தனைக்கும் யார் காரணம் ? நான் (மனிதன்)

உன்னை அளிக்கும் நோக்கத்தில் என்னை

அழித்துக் கொள்கின்றேன். ஆருயிரே

அன்பெனும் கேள்வியை நடத்தி பசுமை என்னும்

வரம் தருவாயாக? அல்லது சாபம் தருவாயா?

நாங்கள் விரும்புவது சுந்தரவனக்காடுகள்

சுடுகாடுகள் அல்ல.

நிலவில்லாமல் இரவில் ஒளி இல்லை

நீ ! இல்லாமல் மனித வாழ்வில் ஒளி இல்லை

உன்னுள் அமைதியாய் இருக்கும்போது

ஆடும் மயிலாய் அமைதியாய் மெருகூட்டுகிறாய்

அளிக்கும்போது எரிமலையாய்

விரிசலாய் படமெடுக்கிறாய்

மனிதன் வளர்ந்தது உன்னுள்

மானுடம் வளர்ந்தது உன்னுள்

நாகரிகம் வளர்ந்தது உன்னுள்

ஒவ்வொரு அணுவிலும் உள்ள உன்னை

என் அன்னையாகக் கருதுவதில் தவறில்லை

கறிமேடாய் ஆகின்ற உன்னை காவியச் சுவடுகளாக

மாற்ற இதோ வருகிறது

இன்னொரு மானுடம்.

Thursday, July 9, 2009

மனிதசக்தியின் மகத்துவம்


கூரையினைப் பார்த்துக்கொண்டு
முலையில் முடங்கிக் கொண்டு
நாளைக்காக காத்துக்கொண்டு
முறையான வாழ்வினை முடக்கிவிட்டு
தெளிவான வாழ்வினை தொலைத்துவிட்டு
தரங்கெட்டு, நன்மதிப்பு கெட்டு வாழும் - இந்த
மனித சமுகமே இன்னுமா உன்னுள் உறங்கிக்கிடக்கும்
"மனித சக்தியை " அறியவில்லை !
ஒருவேளை உணவிற்காக அடிமைப்பட்டு
உனது தன்மானத்தை விட்டெறிந்து
காசை நினைத்து காலம் தள்ளும் மானிடனே
உன்சக்தியினை நீ அறியவில்லையா
போதைக்கு அடிமைப்பட்டு
தன்னம்பிக்கையினைவிட்டு
நல்வாழ்விற்கு பூட்டு போட்டு வாழும் மானிடனே
ஜாதி,மதத்திற்கு உயிரை விட்டது போதும்
ஜிந்தறிவு ஜிவிகளிடமிருந்து உன்னை
வேறுபடுத்திக்கோள்
விண்ணைத் தொட்ட இந்த மனித சக்தி
மண்ணைவிட்டு நீங்குவதில்லை
நாள்தோறும் சவிற்காக நாளேட்டை பார்த்த
நோயாளிக்கு நுறுவயது தருமிந்த "மனிதசக்தி"
தனக்காக வாழாது, பிறருக்கென வாழ்ந்து
பிறர் நலத்தின தன்னலமாக கருதிய
அன்னை தெரசாவின் "கருனைசக்தி"
இதுபிரபஞ்சத்தினை மிஞ்சும் "மகா சக்தி"

Monday, July 6, 2009

வறுமையின் வளமை

ஓலைக்குடிசை
வளைந்து நிற்கிறது
ஓட்டைகளோடு
வயி்ற்று சோறு
ஒருவேளை
அதுவும் சிலவேளை
எப்போதாவது
விளக்கின் வெளிச்சம்
விதியில் தெரியும்!
வறுமை வளமாக வாழ்கின்றது
இங்கே!
மழைத்துளிகள் வெளியில் இருந்து
உள்ளே செல்ல
கண்ணிர் துளி உள்ளே இருந்து
வெளியே வந்து போகின்றது!
இந்த பூமி மேட்டின்
மேல் வறுமையின்
பாட்டு கேட்டுக்கொண்டே
இருகின்றது
ஆண்டாண்டுகாலமாக!

Friday, July 3, 2009

இது சத்தியம்


குழந்தைகள் மேல்
குண்டுமழை
புதியதொரு
வெள்ளப்பெருக்கு.
சிதைத்தவைகள்
உடல்கள் மட்டும் அல்ல
நாளைய கனவுகளும்
நாளைய சிந்தனைகளும்
கொஞ்சி பேசும்
பிஞ்சு உள்ளங்கள்
நஞ்சு வெள்ளத்தில்
ஒ! பாதகர்களே
சிறகுகளை ஓடித்தீர்கள்
உறவுகளை உடைத்தீர்கள்!!
இப்போது
சிறுவர்களையும்
சிதைக்கிறீகிர்கள்
இன்னும் என்னென்ன
செய்ய இருக்கிறீர்கள்!
கவனமாக இருங்கள்
கல்லறைகள் எல்லாம்,,
இந்த ஈழத்தில்
ஒருநாள் கண்விழிக்கும்!
அன்று
உங்கள் ஆட்டமெல்லாம்
அடங்கிப்போகும்
இது சத்தியம்!
இதுவே சாத்தியம்!!

Wednesday, July 1, 2009

ஏன் இந்த மாற்றம்


குளிர்கின்ற தென்றலும்
அனல் காற்றாய் ஆனது
மனம் வீசும் மலர்களும்,
வசனையற்றுப் போனது.
சுழல்கின்ற உலகமும்
தள்ளாடத் தொடங்கியது
காரணம் கண்டன கட்சிகளாக
பூமியில் ஏழைகளின் கண்ணிர்
அதனால் நாடே சீர்கெட்டுப் போனது
கொட்டுகின்றான் பணத்தை கோவிலில்
குறைகள் நீங்குமென்று!
பக்கத்து வீட்டுப் பச்சிளன்குழந்தை
பாலுக்கு அழுவதைக் கண்டும்,
வழுக்கி விழுந்த வயதானவரை
படிதாண்டிப் போகிறான்
தூக்கிவிட்டால் தொற்றிவிடுமாம்
பட்டகைகளில் நோய் என்று!
தமிழ் இளைஞர்களை ஈழத்தில்
கிடங்கு தோண்டி பெட்ரோல் உற்றி,
உயிரோடு கொளுத்துகின்றனர்
அவலக் குரல் அடங்கும்வரை!
ஆறறிவு படைத்த மனிதனே
ஜந்தறிவை மட்டும் பயன்படுத்துவதேன்?
தீமைகள் விட்டுவிடு தீர்வுகளை எடுக்க்விடு
மனிதநேயம் வளர்த்துக்கொள்
மனிதனாக மாறிவிடு..

Sunday, June 28, 2009

தமிழன்


தமிழர்களாய் பிறந்துவிட்டோம்,,
தமிழ் மண்ணை மறந்துவிடோம்,,
தாய் நாட்டை பிரிந்துவிட்டோம்,,
அந்நிய நாட்டிலே வந்து,,
அவதிகள் படுகின்றோம்,,
தமிழன் வாழும் இன் நாட்டில்,,
தமிழனுக்கோர் மதிப்பில்லை,,
வாயிருந்தும் ஊமைகளாய்,,
வாழ்கின்றோம் அகதிகளாய்,,
தாய் நாட்டை நாம் காணும்,,
நாள் அது தொலைவில் இல்லை,,
நாளை மலரும் தமிழ் ஈழம்!


இந்தியாவும், இலங்கையும்

இந்தியாவும், இலங்கையும்
ஓர் எழுத்து இதில் அகதியாய்
வந்தது தான் எங்கள் தலை எழுத்து
தமிழ்க் கொண்டு என்னை வளர்த்த தாயகமே
எங்கள் உயிர்க்காத்த உனக்கு
ஒரு வந்தனமே....
பச்சைக்கிளி கூட்டம் போல
வாழ்ந்து வந்தோம்
இன்று பிச்சை எடுக்கும் கூட்டம் போல
சிதைந்து விட்டோம்
சொத்து சுகம் எல்லாம்
பறி கொடுத்து இன்று
சோத்துக்காக நின்றோம் கைகட்டி
பத்து வருடம் ரத்தம் சிந்தி
சோர்த்தது எல்லாம் பத்து நிமிட
வாழ்க்கை போல கரிச்சாம்பலானது
பித்துபிடித்த தீ பற்றி எல்லாம்
எரிந்து போனதால் கச்சை கூட
இல்லாமல் கை ஏந்தி நின்றோம்.
அகதியை ஓடி வந்தோம்
நாங்கள் வாடிக்கையா
அகதிக்குள்ளே அகதியாக வாழ்ந்து
இன்று வேடிக்கையான
எங்கள் நிலை,
இதற்கு காலம் தன்
பதில் சொல்ல வேண்டும்
...

மனத்துளிகள்


மூடுகின்ற பனிக்கும் எனக்கும்
இடையே தொட்டு போகிறது சோலை காற்று
மழை விழுந்து படி இருக்க,
எப்படியே செல்லமாய் - வந்து
மோதுகின்றது மெல்லிய சாரல்,
தாழ்பால் விலகுகின்ற நொடியில்
உள்ளே வரலாம் - என
கதவடியில் காத்திருந்தது
எட்டி பார்க்கிறது வெய்யில்,
நான் பூச்சுடுவது இல்லை,
இருந்த போதும் - எனக்கு
பூச்சூடி விடுகின்றன மரங்கள்
தங்கள் பூக்களை உதிர்த்து,
மெல்லிய இரவில்,
சாந்தமான தோற்றத்துடன்
அருகில் வந்து அமர்கின்றது என் நிழல்,,
மௌனமாய் இருக்கும் போது,
மழை கசிந்த இரவில்
மனதின் ஓரத்தில் மௌனம் பேசிக்கொண்டிருக்கும்,
மின்சாரம் விடுமுறை எடுக்கும் போது,
இருளில் மடியில் மின் மீனி பூச்சிகள்
மெல்லா சிரிக்கும்
என் கண் இமைக்கும் - இவ்வாறு
ஒவ்வொரு நாளும் விட்டு செல்கின்றன,
என் மனத்துளிகளை!



மனிதநேயம் மலர

ஈழத்தில் குண்டு வெடிப்பு
எங்கள் இதயங்களின்
புகை மண்டலம்
அங்கு எழும் அழுகுரல்
இன்னும்
எங்களின் செவிகளில்
அவர்கள் சிந்திய
கண்ணீர் துளிகள்
எங்களின் உயிரையும் நனைத்தது,,,,
தோண்டத் தோண்ட குண்டுகள்
ஈழமென்ன வெடிகுண்டுகளின்
அட்சய பாத்திரமா......?
வெடித்த சத்தம் ஓய்வதற்குள்
இன்னொரு பலியா?
இறந்தவர்கள் இந்துக்கள், முஸ்லீம்கள்,
என்பதற்கு மேல்
தமிழர் என்பதை ஏன் மறந்தீர்,,,?
மனிதநேயம் மதங்களுக்கு
அப்பாற்பட்டது.,,,
எந்த மதமும் சொல்லவில்லை
மனிதநேயத்தை மறக்கும்படி,,,
இனியாவது மனிதநேயம்
காத்து நிற்போம்
இல்லையானால்
மனிதன் என்ற பெயரை
மாற்றி வைப்போம்.

அமைதி


அமைதியாக அகதியாக,
தங்க இல்லம் ஏதுமின்றி
இடங்கள் பெயர்ந்து,,
உடமைகள் இழந்து,
உயிர்கள் போகும்,
நிலையினை மாற்ற
மரண நிழலில் வாழும் போது
மகிழ்ச்சி வாழ்வை எமக்கருள,
கவலை அனைத்தையும் போக்கி
எமக்கு கனிந்த அமைதி விரைவில் வர,
அச்சம் கொண்டு அழுது புலம்பி
அஞ்ச என்றுரைக்க இனி ஒரு யுகம் வருமா???

நாளைய பதிவுகள்

என் செல்லமே, மேகத்தின்
வெப்பத்தில் இன்றைய
சுவடுகள் நாளை
பதிவாகின்றன - நீண்ட
யுகத்தைப் பற்றி - ஒற்றை
வினாடியில் நீ ஊர்ந்து
கொண்டுடிருப்பதை விட்டுவிட்டு
சுற்றி வரும் உலகைப் பற்றி பிடி
யாராவது தட்டிப் பறித்தல் எட்டிப் பிடி
நாளைய சமுதாயத்திற்காக
கணினியையும் கலப்பையும் கற்றுக் கொள்,
விண்வெளியின் முதுகில் - உன்
விரல்கள் தொடு,
தேடிக் கொண்டிரு - புதியன
புறப்பட்டுக் கொண்டு வரும்.

திருவிளையாடல்

ஏழை தான் நான் _ ஆனால்
என் வீட்டினில் ஆயிரம் விளக்கின் ஒளி
எப்படித் தெரியுமா?- அத்தனையும் ஓட்டைகள்
என் வீட்டு கூரையில் சூரிய நமஸ்காரத்துக்கு
நான் வாயிற்படி தாண்டியதில்லை
உச்சி வேளையில் உணவு வேகவைக்க
வெப்பமூட்டுவதில்லை - ஏன்னென்றால்
வெந்துபோய் இருக்குது, வறட்சியால் என் வீடு.
இரவில் என் வீட்டினுள் நிலாசோறு
மார்கழிப் பூவெல்லாம் மலர்கின்றது என்
வீட்டில் மழைக்காலமென்றால்
மழலைக்கு கொண்டாட்டம்
எனக்கோ நீரோட்ட போராட்டம்!
ஒழுகும் நீரைப் பிடிக்க ஒட்டை சட்டி
அடுப்பங்கரைக்குள் ஆறு வெள்ளம்
நித்திரைக்கு வழியில்லை, நிம்மதிக்கு துணையில்லை
இயற்கைக்குக்கூட இத்திருவிளையாடல்
நடத்த இடமே இல்லையா......?
என் வீட்டை தானே எட்டிப் பார்க்கிறது.......

இன்றைய ஈழம்

ஈழம் இன்று உலகம் முழுதும்
முனங்கும் வேதம்,
வழியின் உச்சத்தில் வார்த்தைகள்
எச்சம் போடும் தேசம்,,,
அய்யோ, என்ற வார்த்தையில் - உண்மை
அர்த்தத்தை உணர்த்தும் பூமி
கண் இமைக்கும் நேரத்தில்
குண்டு மழைகள்,
குவியல் குவியலாய் மனித கரிகள்,
வானத்தில் இருந்து
இயந்திர கழுகுகளின் எச்சங்கள்,
மரங்களிலும் கரங்களிலும் பாதி உடல்கள்,,,
ஒற்றை உடலுக்காக ஒரு குழி தோன்றி
ஒன்பது பெயரை புதைக்கும் வரம் கொண்ட தேசம்,,
உடைகள் மாற்ற ஓரமாய், ஒரு இடம் இல்லை,,
ஓரமாய் இடம் இருந்தால் மாற்ற உடை இல்லை,
அய்யோ,,
புத்தனின் புதல்வர்கள்,
காடுகளுக்குள் காமப் பார்வைகளோடு,,..
இழவு வீடு இங்கு ஒன்று இரண்டு நடக்கின்றது,
அங்கே இழவு தேசமே கிடக்கின்றது,
மிதந்து வருகின்றன உடல்கள் இரத்த ஆறுகளில்,,,,
நாற்பது வயது ஈழத்துக்காய்
தேடிக் கொண்டு இருகின்றாள்
மகளையும், மகனையும்
உயிர்ரோடோ அல்லது பிணமாகவோ
பாதுகாப்பு வளையத்துக்குள் பாதுகாப்பாய் இருக்குறர்கள்
எம் பெண்கள் கற்பை இழந்து விட்டு,,,,
கிளிகள் தானே பெற்று எடுத்தோம்
புலிகள் என்று சொல்லி புதைக்கிறர்கள்,,
இங்கே இமைகள் இருக்கி மூடினால்
நினைவுகளும் கனவுகளும்,,
ஆனால் அங்கே வெடிகுண்டு சத்தம்
ஈழத் தமிழன் கொண்ட பாவம்
தான் என்ன இறைவா! இது
இறைவன் இழைத்த சதியா?
இல்லை மனிதன் இழைத்த பிழையா?