
முனங்கும் வேதம்,
வழியின் உச்சத்தில் வார்த்தைகள்
எச்சம் போடும் தேசம்,,,
அய்யோ, என்ற வார்த்தையில் - உண்மை
அர்த்தத்தை உணர்த்தும் பூமி
கண் இமைக்கும் நேரத்தில்
குண்டு மழைகள்,
குவியல் குவியலாய் மனித கரிகள்,
வானத்தில் இருந்து
இயந்திர கழுகுகளின் எச்சங்கள்,
மரங்களிலும் கரங்களிலும் பாதி உடல்கள்,,,
ஒற்றை உடலுக்காக ஒரு குழி தோன்றி
ஒன்பது பெயரை புதைக்கும் வரம் கொண்ட தேசம்,,
உடைகள் மாற்ற ஓரமாய், ஒரு இடம் இல்லை,,
ஓரமாய் இடம் இருந்தால் மாற்ற உடை இல்லை,
அய்யோ,,
புத்தனின் புதல்வர்கள்,
காடுகளுக்குள் காமப் பார்வைகளோடு,,..
இழவு வீடு இங்கு ஒன்று இரண்டு நடக்கின்றது,
அங்கே இழவு தேசமே கிடக்கின்றது,
மிதந்து வருகின்றன உடல்கள் இரத்த ஆறுகளில்,,,,
நாற்பது வயது ஈழத்துக்காய்
தேடிக் கொண்டு இருகின்றாள்
மகளையும், மகனையும்
உயிர்ரோடோ அல்லது பிணமாகவோ
பாதுகாப்பு வளையத்துக்குள் பாதுகாப்பாய் இருக்குறர்கள்
எம் பெண்கள் கற்பை இழந்து விட்டு,,,,
கிளிகள் தானே பெற்று எடுத்தோம்
புலிகள் என்று சொல்லி புதைக்கிறர்கள்,,
இங்கே இமைகள் இருக்கி மூடினால்
நினைவுகளும் கனவுகளும்,,
ஆனால் அங்கே வெடிகுண்டு சத்தம்
ஈழத் தமிழன் கொண்ட பாவம்
தான் என்ன இறைவா! இது
இறைவன் இழைத்த சதியா?
இல்லை மனிதன் இழைத்த பிழையா?
No comments:
Post a Comment