ஈழத்தில் குண்டு வெடிப்பு
எங்கள் இதயங்களின்
புகை மண்டலம்
அங்கு எழும் அழுகுரல்
இன்னும்
எங்களின் செவிகளில்
அவர்கள் சிந்திய
கண்ணீர் துளிகள்
எங்களின் உயிரையும் நனைத்தது,,,,
தோண்டத் தோண்ட குண்டுகள்
ஈழமென்ன வெடிகுண்டுகளின்
அட்சய பாத்திரமா......?
வெடித்த சத்தம் ஓய்வதற்குள்
இன்னொரு பலியா?
இறந்தவர்கள் இந்துக்கள், முஸ்லீம்கள்,
என்பதற்கு மேல்
தமிழர் என்பதை ஏன் மறந்தீர்,,,?
மனிதநேயம் மதங்களுக்கு
அப்பாற்பட்டது.,,,
எந்த மதமும் சொல்லவில்லை
மனிதநேயத்தை மறக்கும்படி,,,
இனியாவது மனிதநேயம்
காத்து நிற்போம்
இல்லையானால்
மனிதன் என்ற பெயரை
மாற்றி வைப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment